• Sep 20 2024

வீட்டு விஷயத்தில் அதிரடி முடிவெடுத்த கோபி.. ஆச்சரியத்தில் உறைந்து நின்ற பாக்கியா.. பாக்யலட்சுமி இன்றைய எபிசோட்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தொடர்ந்து அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றது. அந்தவகையில் இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதனை பார்ப்போம்.


அதில் அமிர்தா குழந்தையுடன் ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வரும் ஜெனி அமிர்தாவுக்கு தான் கொண்டு வந்த சாப்பாட்டை கொடுத்துவிட்டு பிறகு பாப்பாவுக்கு ஊட்டி விட்டுக்கொண்டே அமிர்தாவிடம் "பாட்டி பேசியதை பற்றி எல்லாம் நினைத்து கவலைப்படாதீங்க, அவங்க இப்படித்தான் பிடிக்காத விஷயம் எது நடந்தாலும் உடனே கோபப்படுவார்கள். நானும் ஆரம்பத்தில் அவங்கள பார்த்து ரொம்ப பயந்தேன் அதுக்கப்புறம் அப்படியே எல்லாம் சரியாயிடுச்சு" என ஆறுதல் கூறுகிறார்.


அதன் பின்னர் எழில் மற்றும் பாக்யா ஆகிய இருவரும் கீழே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அங்கு வரும் ஈஸ்வரி "கோபி கொடுத்த காலக்கெடு முடிஞ்சு போச்சு என்ன பண்ண போறீங்க" என உரத்து சத்தம் போட்டுவிட்டு பிறகு வேகமாக ராதிகா வீட்டிற்கு செல்கிறார். 

அங்கு கோபி ஈஸ்வரியை பார்த்ததும் உடனே "எனக்கு தெரியும் மா என் மனசு இப்பவும் சொல்லிக்கிட்டு இருந்தது நீங்க கண்டிப்பா இங்க வருவீங்கன்னு. இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்த வீட்டில் இருக்க உங்களுக்கு கொஞ்சமும் பிடிக்காது என்று எனக்கு தெரியும்" என சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி "நான் இந்த வீட்ல தங்க வரல உன் கிட்ட பேசிட்டு போக வந்தேன்" என கூறுகிறார். அதுமட்டுமல்லாது நீ அந்த வீட்டை இனி திரும்ப கேட்க கூடாது என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். 


மேலும் "பாக்கியா நமக்கு நிறைய துரோகம் பண்ணி இருக்கா தான் ஆனால் அதை நாம அவளுக்கு திருப்பி பண்ண கூடாது, எனக்காக நீ அந்த வீட்டை கேட்கக்கூடாது என்று சொல்ல ராமமூர்த்தி ஊர்ல இருக்க எல்லா சொத்தையும் உன் பேருக்கு மாத்தி தாரேன் நீ அதுக்கு பதிலா அந்த வீட்டை விட்டுவிட வேண்டும்" என சொல்கிறார். அதற்கு கோபி இது நியாயமா படுது யோசிக்கிறேன் என சொல்கிறார்.

அதன் பின்னர் இரவு வேகவேகமாக வீட்டுக்கு வரும் கோபி எழில் மற்றும் பாக்யாவை அழைத்து உங்களுக்கு கொடுத்த ஒரு மாத டைம் முடிஞ்சு போச்சு என்ன பண்ண போறீங்க? என்ன பண்ணலாம்? பணம் கொடுக்கிறதா சொன்னீங்களே என்ன ஆச்சு என கேட்கின்றார். அதற்கு முதலில் ஆச்சர்யத்தில் உறைந்த பாக்கியா இப்ப என்ன வீட்டை காலி பண்ணனும் அதானே என கேட்க ஈஸ்வரி இப்ப எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி நீ பேசுற? அவன் நல்ல முடிவோட வந்திருந்தாலும் நீயே பேசி அவனை கெடுத்துருவ போல என பாக்கியா மீது கோபப்படுகிறார்‌. இவ்வாறாக இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் ஆனது இத்துடன் முடிவடைகிறது. அடுத்து என்ன நடக்க போகுது என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement