விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…
கோபி ராதிகா வீட்டுக்குச் சென்று அவருடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது வெளியே சென்றிருந்த ராதிகா வீட்டிற்கு வருகின்றார். எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா நம்முடைய வாழ்க்கையை தொடங்கலாம் என கோபி முட்டிபோட்டு கெஞ்சிக் கேட்க ராதிகா கோபம் தணியாமல் வெளியே போக சொல்லி சத்தம் போடுகிறார். மேலும் போக முடியாது என கோபி பிடிவாதம் பிடிக்க அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் ராதிகா.
இதனையடுத்து மீண்டும் கோபி ராதிகாவிடம் பேச முயற்சித்தும் ராதிகா செவி கொடுக்காததால் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
மேலும் இந்தப் பக்கம் ஜெனி வீட்டில் இருக்கப் போவதாக சொல்லி பாக்கியா வீட்டில் இருப்பவர்களையும் அழைக்க ஜெனி இப்போதைக்கு வரமுடியாது என்று சொல்லிவிடுகிறார்.
இதன் பிறகு அந்த வீட்டில் இருக்க எல்லோரும் வெளியே சென்று வரலாம் என சொல்லி செழியனிடம் சொல்லி ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கிறார். ஆனால் செழியன் வழக்கம் போல என்னால் செலவு செய்ய முடியாது என சொல்லி விடுகிறார்.
பின்னர் பாக்கியா ராதிகா வீட்டுக்கு சென்று பிரச்சனை குறித்து விசாரிக்க அவருடைய அம்மா ராதிகாவிடம் இவர் கோபி விவாகரத்து வாங்கிட்டு சந்தோஷமா இருக்க கூடாது என இங்க வந்து குட்டையைக் குழப்ப வந்திருக்கா என பாக்கியா பற்றி தவறாக பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பிற செய்திகள்
- நயன் திருமணத்தை பத்தி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்-கடுப்பான சீமான்..!
- ஒரே நாளில் வெளியாகும் தனுஷ் மற்றும் சிம்புவின் படம்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
- இந்து வேதங்கங்கள் சும்மா இல்ல- மகத் மனைவி சொன்ன முக்கிய விசயம்..!
- வட இந்திய ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் விசுவாசமானவர்கள் -நடிகை தமன்னா
- விடாமல் துரத்திய மர்ம நபர்…பதறிப்போய் வீடியோ பதிவிட்ட பிக்பாஸ் நடிகை..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!