விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் முக்கிய சீரியலாக விளங்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பு நோக்கி நகருகின்றது.
அந்தவகையில் இந்த சீரியலில் இன்று என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம் வாங்க….
பாக்கியா கோபியை பார்த்து ஆதாரத்தோடு கேள்வி மேல் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் மிரண்டுபோன கோபி பாக்கியாவை எப்படியாவது சமாளிக்கவேண்டும் உஷாராக இருக்க வேண்டும் என திட்டம் போட்டு அவர்களிடம் எதையெதையோ சொல்லி படுத்து தூங்கு, உங்களையும் இந்த குடும்பத்தை விட்டுவிட்டு எங்கே போயிடப் போறேன் என சொல்கிறார்.
இதன் பின்னர் கோபி இனி உஷாராக இருக்க வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொள்ள பாக்கியா இவர் சொல்வது எதுவும் நம்பும்படியாக இல்லை என நினைக்கிறார். மறுநாள் காலையில் எழுந்து குடும்பத்தார் அனைவரிடமும் அன்பாக பேசுவது போல டிராமா போடுகிறார் கோபி. இவ்வாறு நடந்து கொள்வதை பார்த்து செல்வி இது ஏதோ பாசத்துல நடந்து கொள்ளுற மாதிரி தெரியவில்லையே , நீ கேட்ட கேள்வியால் தான் நடிக்கிற மாதிரி இருக்கு என பாக்கியாவிடம் சொல்கிறார்.
பின்னர் கோபி ராதிகா வீட்டிற்குச் சென்று பெல் அடிக்க ராதிகாவின் அம்மா கதவைத் திறந்து அவரை உள்ளே அழைக்கிறார். மேலும் இந்த நேரத்தில் ரூமில் இருந்து வந்த ராதிகா கோபி வெளியே செல்லுமாறு சத்தம் போட அவருடைய அம்மா நீ உள்ள போ நான் அவரிடம் பேசி அனுப்பி வைக்கிறேன் என கூறி கோபியிடம் பேசுகிறார்.
மேலும் ராதிகா உங்க மேல ரொம்ப கோவமா இருக்கா, நீங்க எதுக்கு இப்படி உண்மையை மறைத்தீங்க என கேட்க கோபி உண்மையாகவே எனக்கு பாக்கியாவை பிடிக்காது, இவங்க இரண்டு பேரும் இப்படி நெருங்கிய தோழிகளாக பழகுவாங்கனு நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையை சொன்னா ராதிகா என்னை விட்டு போய் விடுவார் என்பதால் தான் நான் மறுத்துவிட்டேன் அதைத் தவிர என் மனதில் வேறு எந்த தப்பும் இல்லை. ஆனா ராதிகா என்ன புரிஞ்சிக்காம பேசுறா, பாக்கியா விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவுடன் சேர்ந்து வாழப் போவது எல்லாம் உண்மைதான் என சொல்கிறார்.
இதையெல்லாம் கேட்ட ராதிகா மீண்டும் வெளியே வந்து நீங்க சொல்ற கதை எல்லாம் நம்ப தயாராக இல்லை வெளியே போங்க என திட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.
இதன் பின்னர் ராதிகாவின் அம்மா கோபி மனதில் எனக்குத் தெரிந்து எந்த தப்பும் இல்லை, உங்களோடு வாழத்தான் ஆசைப்படுகிறார் எல்லாத்தையும் மறந்து விட்டு அவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழச் சொல்கிறார். நீ வேண்டாம் என்ன சொன்னாலும் அவர் அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய தானே போகிறார் என கூறுகிறார். இதனால் ராதிகா யோசிக்க தொடங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
பிற செய்திகள்:
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா…சொக்கிப்போன ரசிகர்கள்..!
- கண்மணியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபல இயக்குநர்-வைரலாகும் புகைப்படங்கள்..!
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 80கால கட்ட வில்லன் நடிகர்…வெளியானது புதிய ருவிஸ்ட்..!
- நஸ்ரியா திரும்பவும் நடிக்க வந்ததற்கு இதான் காரணமாம்.. அவரே கூறிய தகவல்..!
- விக்னேஷ் சிவனின் வீட்டாரை திருமணத்திற்கு அழைக்க மறுத்த நயன்-கண்ணீரோடு அவர்கள் அளித்த பேட்டி..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!