இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகபொன்னியின் செல்வன் திரைப்படம் உள்ளது. இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் ரோலில் விக்ரம், வந்தியத்தேவன் ரோலில் கார்த்தி,நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய், குந்தவை ரோலில் த்ரிஷா, அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் கடந்த 8ம் திகதி இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழில் இந்த டீசர் 30 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விக்ரம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் இந்த விழாவில் விக்ரம் கலந்து கொள்வார் என ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கலந்து கொள்ளாதது அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் டீசர் விழாவில், ஆதித்ய கரிகால சோழனை ரசிகர்கள் மிஸ் செய்ததால் நாளை மாலை 5 மணிக்கு விக்ரம் ஸ்பெஷல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக பொன்னியின் செல்வன் டீம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- நம்ம நடிகை குஷ்புவா இது- ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கிற மாதிரி அழகாக இருக்கின்றாரே
- நடிகர் சல்மான்கானை கொலை செய்ய 4 லட்சம் ரூபாயில் துப்பாக்கி வாங்கிய கும்பல்- வெளியாகிய திடுக்கிடும் தகவல்
- முன்னழகை மொத்தமாக காட்டி யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று- நினைவு கூர்ந்து வரும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!