• Sep 20 2024

இயக்குநர் அமீரின் வீட்டில் ஏற்பட்ட சோகம்-இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படத்தில் நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் தான் அமீர்.

அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநர் ஆனார்.

இவ்வாறு இருக்கையில் பருத்திவீரன் திரைப்படம் இயக்குநர் அமீருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரத்தையும் முன்னணி இயக்குநர் என்கிற அடையாளத்தையும் வழங்கியது.

இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அமீர்.

இந்நிலையில், அவரது அம்மா பாத்துமுத்து பீவி வயது முதிர்வு காரணமாக காலமானார் என செய்தி வெளியாகி உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் இயக்குநர் அமீருக்கு திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். சென்னையிலுள்ள கேகே நகரிலுள்ள இயக்குநர் அமீரின் வீட்டில் அவரது அம்மாவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement