ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் அனைவருக்கும் பரீட்சயமானவர் தான் நக்ஷத்திரா. இந்த சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். அத்தோடு இவருக்கு அண்மையில் தான் திருமணமும் முடிவடைந்தது.
இந்த நிலையில் இவரது சகோதரி தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஏ.சி பஸ்ஸை புக் பண்ணி அதில் சென்றிருக்கின்றார்.இப்படி அவர் பஸ்ஸில் பயணிக்கும் போது நித்திரையாகி விட்டார். இந்த நேரத்தில் ஒருவர் அவரின் அனுமதி இல்லாமல் அவரது உடலைத் தொட்டிருக்கின்றார்.
இதனை அடுத்து அவர் கத்தி கூச்சலிட்டதால் பஸ்ஸில் பயணித்துக் கொண்டவர்களும் சுதாகரித்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து பலத்த விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!