• Sep 20 2024

பிரபல சீரியல் நடிகருக்கு நிகழ்ந்த துயர சம்பவம்- மனைவியே நடத்திய நாடகம்- இப்படியெல்லாம் பண்ணுவாங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபல்யமானவர் தான் நடிகர் வெங்கடேஷ் .தற்போது மதுரையில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படுகின்றது.

இது அவரது மனைவி பானுமதிக்கு தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகினறது.இதனால் வெங்கடேஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கின்றார்.


இதனால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதையடுத்து இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதன் காரணமாக கணவர் வீட்டிலேயே இருக்க அவரது காலை உடைக்குமாறு தனது  வீட்டில் கார் ஓட்டுனராக பணி யாற்றிய மோகன் என்பவரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்.

 ராஜ்குமார் காலை உடைக்க  ஒரு லட்சம் கேட்டதால், பா.ஜ.க. பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் உறவினரான வைரமுத்து என்பவரிடம் பானுமதி உதவி கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் பா.ஜ.க பற்றி தவறாக பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

பா.ஜ.க-வைச் சேர்ந்த 28-வது வார்டு மண்டல தலைவர் மலைசாமி, பா.ஜ.க. கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் கடந்த ஜூன் 15-ந் தேதி இரவு நாகனாகுளம் அருகே வைத்து வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 


இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வெங்கடேஷ் தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேஷின் மனைவி பானுமதி  ராஜ்குமார் , மோகன் , வைரமுத்து, மலைசாமி, ஆனந்தராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement