• Sep 20 2024

விரைவில் எனக்கும் திரிஷாவுக்கும் திருமணம் … பரபரப்பை ஏற்படுத்திய முக்கிய பிரபலம்..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் திரிஷா, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நல்ல மார்க்கெட் த்ரிஷாவுக்கு இருந்தது.சினிமா உச்சத்தில் இருந்த போதே கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து அதற்கான திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது, இதில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர்.

வருண்மணியனை திருமணம் செய்ய முடிவு எடுப்பதற்கு முன்பு வரை தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வந்தார் திரிஷா, இந்த காதல் ஜோடி ஒன்றாக உலகம் முழுவதும் சுற்றி வந்தது, இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இந்த காதல் ஜோடி பிரிந்ததது, இதன் பின் காதல் தோல்விக்கு பின் சிறிது காலம் தனியாக இருந்தார்.

இதன் பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு திருமண வாழ்க்கையை தொடங்க முடிவு செய்த திரிஷா தொழிலதிபர் வருண்மணியனை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்து இருவருக்கும் திருமண நிச்சயம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதி சென்னையில் நடைபெற்றது.த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்களின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக இருந்த திரிஷா, சில வருடம் பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கினார், இதற்கு முக்கிய காரணம்,நடிகை நயன்தாராவின் வளர்ச்சி தான், தொடர்ந்து சரிந்த மார்க்கெட்டை மீட்டெடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் திரிஷா, ஆனால் அது நயன்தாரா இருக்கும் வரை முடியாத காரியமாக திரிஷாவுக்கு அமைத்தது.

இந்நிலையில் தற்பொழுது நயன்தாரா திருமணத்திற்கு பின்பு அவரின் மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மேலும் நயன்தாரா இல்லாததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

இப்படி ஒரு சூழலில், தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பிரபலமானவர்தான் ஏ.எல்.சூர்யா. இவர் தன்னை ஒரு ஆன்மீக சிந்தனையாளர் என்று தெரிவித்து கொண்டு பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது மற்றும், சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு ஏ.எல்.சூர்யா யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

த்ரிஷாவை தான் காதலித்து வருகிறேன். ‘லியோ’ படத்திலிருந்து த்ரிஷா வெளியேறவேண்டும். எனக்கு விஜய் மீது கடும் கோபம் உள்ளது. த்ரிஷாவை தான் விரைவில் திருமணம் செய்ய போகிறேன். அவரை நான் காதலித்து வருகிறேன் என்றார். 

உடனே, தொகுப்பாளர் த்ரிஷாவை எப்போது பார்த்தீர்கள்? ஏன் விஜய் மீது இவ்வளவு கோபம்? என்று கேட்க, அதெல்லாம் கூறமுடியாது என்று ஏ.எல்.சூர்யா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திரிஷா தற்பொழுது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சில வருடங்களாக சரிந்து கிடந்த தன்னுடைய மார்கெட்டை மீட்டெடுக்க போராடி வரும் இந்த சூழலில், ஆன்மீக சிந்தனையாளர் என்கிற பெயரில் ஏ.எல். சூர்யா போன்றோர் பேட்டி உண்மையிலே திரிஷா இவரை திருமணம் செய்ய போகிறாரா.? என மக்கள் மத்தியில் குழப்பம் அடைய செய்து, திரிஷாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிப்பது போன்று அமைத்துள்ளதாக திரிஷா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement