இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும், கோலிவுட் ரசிகர்களின் மிக விருப்பமான ஜோடிகளான இவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
லியோ படக்குழு தற்போது படத்தின் முக்கிய செட்யூலுக்காக காஷ்மீரில் உள்ளது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் என 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். ஆனால், இதில் சிலர் குளிர் தாங்க முடியாமல் இந்தியா திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவபெருமானின் மஹா சிவராத்திரியான நேற்று காஷ்மீரில் உள்ள மாமல்லேஸ்வர் கோவிலில் நடிகை த்ரிஷா ,சிவனின் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டிருந்தார்.
இந்த வழிபாட்டு வீடியோவினை தனது இன்ஸ்ட்ராக்ராமில் பதிவிட்டுள்ளார்.இதனை ரசிகர்கள் பார்த்து லைக்ஸினை குவித்து வருகிறார்கள்.
Listen News!