தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. 40 வயதை நெருங்கிவிட்டாலும், இளமை ததும்ப அழகு தேவதையாக காட்சியளிக்கும் இவருக்கு தற்பொழுதும் படவாய்ப்புக்கள் குவிந்தவாறே இருக்கின்றன. இந்த வகையில் மணிரத்ணம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையா நடித்து அசத்தியிருந்தார்.
இப்படத்தில் இவருடைய நடிப்பும் அழகும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது.இதனை அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகின்றார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மேலும் தி ரோடு என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் .இந்த நிலையில் த்ரிஷா தனது தோழியுடன் சண்டை பிடித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது தனது நண்பியிடம் சோக்லேட்டுக்காக சண்டை பிடித்துள்ளார். ஒரு சோக்லேட் பையை யார் எடுப்பது என்றே இந்த சண்டை நடந்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் த்ரிஷா இப்பவும் குழந்தை மாதிரியே இருக்கிறார் என கமெண்ட் பண்ணி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!