த்ரிஷா நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்-2' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வருகின்றது. இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று மிகச்சிறப்பாக நடித்திருந்தார் த்ரிஷா.
இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார் த்ரிஷா. பல வருடங்களுக்கு பிறகு திரையில் விஜய்யும், த்ரிஷாவும் இணைந்திருப்பதால் அதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் த்ரிஷா குறித்து கூறிய விடயமானது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தவகையில் அவர் பேசுகையில் "திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தால் யாருக்கும் கட்டுப்படாமல் இருக்கலாம். த்ரிஷா திருமணம் செய்துகொண்டால் அவரது கணவர் சினிமாவிலிருந்து விலக சொல்வார். இதனால்தான் த்ரிஷா திருமணம் செய்துகொள்ளவில்லை" என்றார்.
மேலும் "சமந்தாவுக்கு நடந்த விவாகரத்து திருமணம் பற்றிய விஷயத்தில் த்ரிஷாவை நிறையவே யோசிக்க வைத்துவிட்டது. இதனால் திருமணம் செய்துகொண்டால் தனது மார்க்கெட் வேல்யூ சரிந்துவிடும் என்றும் அவர் பயப்படுகிறார். இதன் காரணமாகவும் த்ரிஷா திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்" எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது "த்ரிஷா குடிக்கு அடிமையாகி பல முறை சண்டை போட்ட வீடியோக்களும், குத்தாட்டம் போட்ட வீடியோக்களும் வெளியாகியுள்ளன. நடிகை த்ரிஷா சென்னையில் இருக்கும் நீலாங்கரை வீட்டில் குடித்துவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் ஆட்டம் போட்டார். அந்த விஷயம் காவல் துறைவரைக்கும் சென்றது. அதுமட்டுமின்றி போதையில் குத்தாட்டம் போட்ட த்ரிஷா என்ற தலைப்பில் செய்திகளும் வெளியானது" எனவும் த்ரிஷா பற்றி அவதூறாக கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
எது எவ்வாறாயினும் த்ரிஷா போதைக்கு அடிமையாகி விட்டார் என்ற அர்த்தத்தில் பயில்வான் கூறிய இந்த விடயமானது பரபரப்பை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!