தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் த்ரிஷா. இவர் விஜய் அஜித் கமல் ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.இதனால் மக்கள் மத்தியில் தனக்னெ ஒரு தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார். மணிரத்தினத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே பேராதரவை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறுஇருக்கையில் நடிகை த்ரிஷா அரசியலில் நுழைகிறார் என நேற்று தகவல் பரவிய நிலையில் அது பற்றி அவரது அம்மா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அதாவது சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்து செயல்பட இருக்கிறார் என கூறப்பட்டது.
இது பற்றி த்ரிஷாவின் அம்மாவிடம் கேட்டதற்கு அவர் இது முற்றிலும் வதந்தி என கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
"இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. த்ரிஷா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.விரைவில் அவரது அடுத்த படம் பற்றி அறிவிப்புகள் வரும்" என அவர் கூறி இருக்கிறார்.
Listen News!