தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள த்ரிஷா இப்போது நிற்க கூட நேரமில்லாமல் பிசியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் மூலம் உயர்ந்துள்ள இவருடைய மார்க்கெட் தற்போது லியோவால் எகிறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
படங்களில் பிசியாக இருந்து வந்தாலும் த்ரிஷா தன்னுடைய தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எந்தவொரு அக்கறையும் கொள்வதாக தெரியவில்லை. மேலும் வயதாகியும் இன்னும் த்ரிஷாவிற்கு திருமணம் செய்து வைக்கவில்லையே ?அவரை வைத்து அவருடைய அம்மா பணம் சம்பாதிக்கிறார் என்று பலரும் விமர்சனக் கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர்.
இருப்பினும் பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவரை த்ரிஷாவிற்கு திருமணம் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த நிச்சயதார்த்தம் பாதியிலேயே நின்று போனது நம் அனைவருக்கும் தெரியும். இதன் பின்னர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்சிப்பில் இருந்ததாகவும் ஏற்கெனவே ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பின்னர் அதுவும் கிசுகிசுவாகவே முடிந்தது.
இந்நிலையில் தற்போது த்ரிஷாவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது த்ரிஷா மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகின்றது.
இருப்பினும் அந்த தயாரிப்பாளர் யார் என்பது குறித்த முழுவிபரம் இன்னமும் வெளியாகவில்லை. இது உண்மையா..? அல்லது இதுவும் வதந்தி தானா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!