• Sep 21 2024

பாடம் சொல்லிக் கொடுத்த செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்.. கொட்டாவி விட்ட குழந்தை.. கியூட் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர். இவரும் சின்னத்திரை நடிகர் அர்னவும் சீரியலில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

தங்களது மத முறைப்படி திருமணமும் செய்துக் கொண்டனர். இருவரும் இணைந்து வாழ்ந்துவந்த நிலையில், கர்ப்பிணியான தன்னை, அர்னவ் அடித்து துன்புறுத்துவதாக திவ்யா ஸ்ரீதர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து போலீசார் அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நிபந்தனை ஜாமீனில் அர்னவ் வெளியில் வந்துள்ளார். தற்போது செல்லம்மா என்ற தொடரில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் ஒருவர்மீது ஒருவர் மாற்றி மாற்றி புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அவர் புதிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது குழந்தையை மட்டும் காட்டியுள்ளார். அவரது வாய்ஸ் மட்டும் அந்த வீடியோவில் வெளிப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் தன்னுடைய குழந்தைக்கு குட் மார்னிங் சொல்லி துவங்குகிறார் திவ்யா. தொடர்ந்து குழந்தைக்கு அம்மா என சொல்லிக் கொடுக்கிறார். இவை அனைத்திற்கும் குழந்தை நன்றாக ரியாக்ட் செய்கிறது. 

ஒரு கட்டத்தில் டயர்டாகி கொட்டாவி விடுகிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement