சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல ஹிட் சீரியலான 'ரோஜா' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியலின் மூலமாக இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். இந்த சீரியலானது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கிய 'சீதா ராமம்' என்ற சீரியலில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். ஒளிபரப்பாகிய குறுகிய காலத்திலே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பிரியங்கா இருந்துள்ளார்.
நடிகை பிரியங்காவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், கணவரின் விருப்பத்தினால் அவர் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து டிவி சேனல் கூறுகையில் "சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை அல்ல, பிரியங்கா இந்த சீரியலில் மிகவும் விருப்பப்பட்டு தான் நடித்து வருகிறார். அவருக்கு சீரியலில் இருந்து வெளியேறும் எண்ணம் கிடையாது, தொடர்ந்து சீதாவாக பிரியங்கா நல்காரி நடிப்பார்" என தெரிவித்துள்ளது.
எனவே உண்மை என்ன என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!