தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் மாநாடு. இப்படத்தினை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்ததோடு எஸ் ஜே சூர்யா எனப் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
மேலும் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு அதன் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்துள்ளது.
உலகம் முழுவதும் படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.மிகப்பெரிய சறுக்கத்தில் இருந்த சிம்புவிற்கும் இந்த படம் முக்கிய படமாக அமைந்தது. ஆனால் சிம்புவிற்கு முன்னதாக வெங்கட்பிரபு இரண்டு முன்னணி நடிகர்களிடம் இந்த கதையை கூற அவர்கள் கேட்டுவிட்டு வேண்டாம் என நிராகரித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம் நடிகர் சூர்யாவிடம் வெங்கட்பிரபு முதல் முதலாக இந்த கதையைக் கூற அவர் வேறு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்க அதன் பின்னர் தான் மாஸ் திரைப்படத்தின் கதையை கூறி படத்தை இயக்கியுள்ளார்.
அதேபோல் கார்த்தியிடம் இந்தப் படத்தின் கதையை சொல்ல அவரும் வேறு கதை கேட்டு பிறகுதான் பிரியாணி படத்தின் கதையைக் கூறி இப்படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. மேலும் இவர்கள் இருவரும் இந்த படத்தை நிராகரிக்கவே கடைசியாக இந்த வாய்ப்பு சிம்புவிற்கு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.இதைக் கேட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் கடும் வேதனையில் உள்ளார்களாம்.
Listen News!