விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் 7வது சீசனின் முதல் வார இறுதியில் அனன்யா மற்றும் பவா செல்லதுரை வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
அத்துடன், பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆக உள்ளதால், மீதம் 15 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் பாதியில் எண்ட்ரி கொடுப்பார்கள்.
அந்த வகையில் இந்த முறையும் இரண்டு வைல்டு கார்டு போட்டியாளர்கள் அடுத்தடுத்து எண்ட்ரி கொடுக்க உள்ளார்களாம்.
அதன்படி, சீரியல் நடிகை அர்ச்சனா வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுக்க உள்ளது உறுதியாகி உள்ள நிலையில், மற்றொரு வைல்டு கார்டு போட்டியாளராக புகழ்பெற்ற கானா பாடகரான கானா பாலா எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
Listen News!