தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தலை சிறந்த அரசியல் வாதியாகவும் விளங்கி வருபவர் உதயநிதி ஸ்டாலின். அதாவது ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமா உள்ளே நுழைந்து, பின்னர் நடிகராகவும், திரைப்பட விநியோகஸ்தராகவும் மாறி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு,வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மாறினார். எனினும் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகாது திரைப்படங்களிலும், திரைப்பட தயாரிப்பிலும், கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தமிழக அமைச்சரவையில் 'இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை' அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு அமைச்சராக மாறிய பின்னர், தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்த உள்ளதால் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படமே தன்னுடைய கடைசி திரைப்படம் என்றும், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்திலிருந்து அதிரடியாக விளக்குவதாகவும் உதயநிதி அறிவித்தார். இது உதயநிதி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்தோடு உதயநிதி இந்த படத்தில் இருந்து விலகிய பின்னர், தற்போது இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. மேலும் உதயநிதி அடுத்ததாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தலைமை பொறுப்பில் இருந்தும் விலக உள்ளதாக சில தகவல்கள் ஏற்கெனவே வெளியாகி இருக்கின்றன.
இதனால் இவரைத் தொடர்ந்து அதன் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார் என பலரும் கேள்வி கேட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு பதில், அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதி ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் என்றும், திரைப்படங்களிலும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி என்பதற்கு பதிலாக கிருத்திகா உதயநிதி என்கிற பெயர் மாற்றம் பெறும் என்று சில தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ள. இருப்பினும் இது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!