• Sep 20 2024

'மாமா, மாப்ஸ் என்று உறவு சொல்லித்தான் பேசுவோம் மற்றபடி எந்த சலுகையும் இல்லை'-ஹரி பற்றி கூறிய அருண் விஜய்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் வருபவர் தான் ஹரி. சில ஆண்டுகளுக்கு பிறகு இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் யானை. இப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இவர்களுடன் சமுத்திரகனி, அம்மு அமிராமி, ராஜேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றதோடு படத்தின் ட்ரெய்லரும் அதில் வெளியிடப்பட்டது.

அந்த வகையில் படத்தில் நடித்திருப்பது பற்றி அருண் விஜய் கூறியதாவது: மாமாவின் (ஹரி) இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். அது தள்ளிபோய் கொண்டே வந்து இப்போது நிறைவேறியிருக்கிறது, படப்பிடிப்பில் மாமா, மாப்ஸ் என்று உறவு சொல்லித்தான் பேசிக் கொள்வோம். மற்றபடி எந்த சலுகையும் இல்லை. உறவு வேறு, கலை வேறு என்பதை தெளிவாக புரிந்து கொண்டு பணியாற்றினோம்.

இந்த படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்த படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். படத்தின் ஆக்சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement