• Sep 20 2024

எதிர்பாராத திடீர் திருப்பம்... இந்த வாரம் எவிக்ட் ஆவது இந்த போட்டியாளரா? ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பமான  இந்த நிகழ்ச்சியானது 10 வாரத்தை கடந்து ஒளிபரப்பாகின்றது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

அந்தவகையில் ஆறாவது சீசனில் கடந்த வாரம் முதல் முறையாக டபுள் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை ராம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆயிஷா என இருவர் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் எனப் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்சிதா, மணிகண்டன் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இவர்களில் மணிகண்டன் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அதனால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்பட்டது.


ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவது ஏடிகே என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


அத்தோடு கடந்த சில நாட்களாக ஏடிகே ஆவேசமாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பாக அசீமுக்கு சிம்மசொப்பனமாக அவர் இருந்து வந்த நிலையில் அவர் திடீரென வெளியேற்றப்படுவது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement