தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. இவர் தனது நகைச்சுவைத் திறமை மூலம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவர் பல பிளாக்பஸ்டர் படங்களையும் கொடுத்துள்ளார்.
அந்தவகையில் இறுதியாக சிவலிங்கா மற்றும் மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்த வடிவேலுவுக்கு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் சில காலமாக வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் அவர் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் ஒப்பந்தமாகி நடித்தார். இப்படமானது வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆகவில்லை.
இதனையடுத்து தற்போது 'சந்திரமுகி-2வில் நடித்து வருகின்றார். அப்படத்தில் இவருக்கு ஏகப்பட்ட தொல்லை எனவும் அதனால் தான் அந்த காட்சிகளை குறைத்து விட்டார்கள் எனவும் கூறப்படுகின்றது. உதாரணமாக 9மணிக்கு ஷூட்டிங் என்று வடிவேலுவை போன் பண்ணி வர சொன்னால், அதற்கு வடிவேலு உடனே 10க்கு வந்திடவா என்று கேட்பாராம். அதற்கு சரி ஓகே 10க்கு ஆவது வாங்க என்றால் மறுபடியும் அவர் 11க்கு வர்றேன் என்பாராம்.
இல்லை சார் அவசரமான ஒரு ஷூட்டிங் 10 க்குள்ள வந்துடுங்க என்றால், ஓகே என்று சொல்லி விட்டு 9மணியில் இருந்து 11மணி வரைக்கும் போனை ஆப் செய்து வைத்து விடுவாராம். இன்றுவரைக்கும் திருந்தாது இந்த மாதிரி எல்லாம் வடிவேலு பண்ணிக்கிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
Listen News!