• Sep 20 2024

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டு சென்னை திரும்பிய வடிவேலு- யாருடன் நிற்கிறார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசுவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் மைசூரில் நடந்தது.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கின்றார்.ஹாரர் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதோடு 'வைகை புயல்' வடிவேலுவும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் கதாநாயகியாக குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

தற்போது மைசூரில் நடந்த படப்பிடிப்பை நடிகர் வடிவேலு முடித்து கொண்டு விமானம் மூலம் சென்னை வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மைசூர் விமான நிலையத்தில் அங்கு பணிபுரியும் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement