தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக பாடலாசிரியர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் வைரமுத்து. அதிலும் குறிப்பாக இளையராஜா இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாயின. அதுமட்டுமல்லாது வைரமுத்து அவர்கள் ஏராளமான விருதுகளையும் வாரிக் குவித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அன்றும் சரி, இன்றும் சரி சினிமா பிரபலங்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்றவற்றின் போது அவர்களை வாழ்த்தவும் நினைவு கூறவும் தவறுவதில்லை. இந்நிலையில் தற்போது மறைந்த கவிஞர் வாலியை நினைவு கூர்ந்து உருக்கமாக டிவிட்டியுள்ளார் வைரமுத்து.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "கமல் இருக்கும் வரை ரஜினிக்கும், ரஜினி இருக்கும் வரை கமலுக்கும், விஜய் இருக்கும் வரை அஜித்துக்கும், அஜித் இருக்கும் வரை விஜய்க்கும் ஒரு பிடிமானம் இருக்கும், எனக்கிருந்த பிடிமானத்தைப் பிய்த்துக்கொண்டு போய்விட்டீர்களே வாலி அவர்களே, காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்துவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவருடைய பண்பை பாராட்டி வருவதோடு, வாலியின் மறைவை இன்றுவரை வருந்தும் வைரமுத்துவுக்கு நெகிழ்ச்சியுடன் தமது ஆறுதலினைத் தெரிவித்து வருகின்றார்.
கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களே
காற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்
Listen News!