• Sep 21 2024

ஜி.வி.பிரகாஷுக்கு பாட்டெழுதிய வைரமுத்து-அவரே ரசிகர்களுக்கு பகிர்ந்த வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த தங்கர் பச்சான், தற்போது கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்ற படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மலையாள நடிகை மம்தா மோகன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

மேலும் அப் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



கருமேகங்கள் ஏன் கலைகின்ற படத்தின் படப்பிடிப்பு ஜூலை 25-ஆம் தேதி  ஆரம்பமாகியது. இந்த நிலையில் தற்போது ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் பாடல்களை உருவாக்கும் வேலைகளில் இயக்குநர் இறங்கியுள்ளார்.

ஜி.வி இசையில் வைரமுத்து பாடல் எழுதுகிறார் என கூறப்படுகின்றது.  அவர்கள் மூவரும் பாடல் உருவாக்கும் பணியில் ஈடுபட்ட காட்சியை, பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் அதில் கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்திற்கு பாட்டு எழுத கலை மேகங்கள் கூடிய தருணம்... மெட்டுக்கு பாட்டு எழுதினேன் என வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் வைரமுத்து.

அது தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.இதோ...




Advertisement

Advertisement