• Sep 20 2024

ஏமாற்றி நடிக்க வைத்த பிரபல இயக்குநர்-உண்மைகளை உடைத்த மெட்டி ஒலி புகழ் வனஜா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிங்கம் படம் சூர்யா மற்றும் ஹரி கெரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது. சிங்கம் முதல் பாகம் தற்போதும் அதிகம் ரசிகர்களை கவர்ந்த படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தில் விலைமாதுவாக நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார் மெட்டி ஒலி புகழ் வனஜா.இவர் எப்போதும் சீரியல்களில் ஹோம்லியாக நடித்த அவரா இப்படிப் பட்ட ரோலில் நடிப்பது என அனைவரும் ஷாக்கானார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வனஜா அளித்த பேட்டியில் தன்னை ஏமாற்றி சிங்கம் படத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை பான் மசாலா போட சொல்ல இருக்கிறார்கள், ஏன் என கேட்ட போது தான் அவருக்கு தனது ரோல் என்ன என்கிற உண்மை தெரிய வந்திருக்கிறது.அத்தோடு வனஜாவின் கணவர் (அப்போது திருமணம் ஆகவில்லை) தான் அந்த படத்தில் துணை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

அவர் தான் இந்த ரோலில் நடிக்க சொல்லி இருக்கிறார். அதனால் அவருடன் வனஜா சண்டை போட்டிருக்கின்றார். வனஜாவின் அப்பாவும் அந்த நேரத்தில் சமாதானப்படுத்தி, ஹரி சாருக்காக அதில் நடி என கூறி நடிக்க வைத்து இருக்கிறார்களாம் என கூறியுள்ளார்.

அதனால் விருப்பமே இல்லாமல் கடும் கோபத்தில் தான் சிங்கம் படத்தில் நடித்தேன் என வனஜா தற்போது அளித்திருக்கும் பேட்டியில் கூறி இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement