• Sep 21 2024

வந்திட்டாரு ஆதி குணசேகரன்... ஈஸ்வரிக்கு காத்திருந்த அதிர்ச்சி... அண்ணனை உசுப்பேத்தும் கதிர்.. பதிலுக்கு சவால் விட்ட ஜனனி... அட்டகாசமான Ethirneechal - Promo..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்ற 'எதிர்நீச்சல்' சீரியலின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஈஸ்வரிக்கு போன் பண்ணிய ஜீவானந்தம் "குணசேகரன் இருக்கிற இடம் தெரிந்து விட்டது" எனக் கூறுகின்றார். இதனைக் கேட்டதும் ஈஸ்வரி, ஜனனி உட்பட அனைவரும் ஷாக் ஆகின்றனர். 


மறுபுறம் கதிருக்கு போன் பண்ணிய ஆதி குணசேகரன் "என்ன நடந்தாலும் இந்த வாட்டி மிஸ் ஆகவே கூடாது கதிர்" எனக் கூறுகின்றார். பதிலுக்கு கதில் "இந்த தடவை பிசிரே தட்டாது அண்ணை நா பார்த்துக்கிறேன்" என்கிறார். 


இதனைக் கேட்ட ஜனனி "இந்த வாட்டி நாமளா அவரா என்று பார்த்திடுவோம்" என்கிறார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


எனவே இந்தப் ப்ரோமோவைப் பார்க்கும் போது இன்றைய தினம் போனில் பேசிய ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நேரில் என்ட்ரி கொடுப்பார் என்பது தெளிவாகிறது. எது எவ்வாறாயினும் அடுத்த ஆதி குணசேகரன் முகத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement