விஜய் டிவியின் ஆஹா சீரியல் மூலம்தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் பிரபல நடிகை வாணி போஜன். இதனைத் தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பன தெய்வமகள் என்னும் சீரியல் தான் இவருக்கு சிறந்ததொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதனை அடுத்து பல சீரியல்கள் விளம்பரங்களில் நடித்திருந்தாலும் தற்பொழுது இவருக்கு வெள்ளித்திரையில் படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. அதன் படி ஓ மை கடவுளே என்னும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.அப்படம் இவருக்கு சிறந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் இவர் ஜெய்யுடன் ட்ரிபிள்ல் வெப் தொடரில் நடித்திருந்தார்.தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் இவர் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான இந்த தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையொட்டி வாணி போஜன் பிரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டார்.
அப்போது தனக்கு மிகவும் பிடித்த நடிகை சமந்தாதான் என்று குறிப்பிட்டுள்ளார்.சமந்தா மிகவும் போல்டானவர் என்றும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்வகையில் அவருடைய செயல்பாடுகள் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பிரபல நடிகையாக உள்ள வாணி போஜன் தன்னுடைய சக நடிகை குறித்து இவ்வாறு கூறியுள்ளது சமந்தா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Listen News!