• Sep 21 2024

மனைவியை பின்தொடர்ந்து துரத்திச் சென்ற சூர்யா... கிளாஸ் ரூமில் கணவன் கூறிய வார்த்தை... கொதித்தெழுந்த வெண்ணிலா... சூப்பரான ப்ரோமோ வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ஒரு தொடர் தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் காதல், குடும்பம், சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


அந்தவகையில் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலா ஓட்டோ ஒன்றை வழிமறித்து ஏறுகின்றார். அவரை பின்தொடர்ந்து துரத்தி வந்த சூர்யா அதே ஓட்டோவில் தானும் ஏறுகின்றார். அந்த சமயத்தில் ஓட்டோ சாரதி "என்ன சார் லவ் ஓ" என சூர்யாவிடம் கேட்கின்றார். அதற்கு சூர்யா இவ என் பொண்டாட்டி எனக் கூறுகின்றார்.  


மறுபுறம் கிளாஸ் ரூமில் சூர்யா வரவு எடுத்துக் கொண்டிருக்கின்றார். அப்போது "MRS.வெண்ணிலா" எனக் கூப்பிடுகின்றார். பதிலுக்கு வெண்ணிலா "நான் MRS.வெண்ணிலா இல்ல, MISS.வெண்ணிலா" எனக் கூறி முகத்தடி கொடுக்கின்றார்.  அதற்கு சூர்யா நானும் அதை தான் சொன்னேன் எனக்கூறி சமாளிக்கின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement