• Sep 20 2024

மணக்கோலத்தில் காட்சியளிக்கும் வனிதா…அவரே போட்ட பதிவு…குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் முதன் முதலாக 1995-ஆம் ஆண்டில் 'சந்திரலேகா' என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியிருந்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துப் பிரபலமாகியிருந்தார்.

கதாநாயகியாக பிரபலமாகி இருந்த இவர் கடந்த சில வருடங்களாக சர்ச்சை நாயகியாகவே பலராலும் பார்க்கப்பட்டு வருகின்றார். அதற்கு காரணம் இவர் பல திருமணங்கள் செய்தமையே ஆகும். அதாவது 2000-ஆம் ஆண்டில் துணை கதாபாத்திர நடிகரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்திருந்தார்.

எனினும் சில காலங்களின் பின்னர் அவருடனான வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு ஜெய் ராஜன் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இவருடனும் இவர் நீண்டகாலம் வாழவில்லை. தொடர்ந்து இவரைப் பிரிந்து சென்று நடிகரான ராபர்ட் என்பவருடன் வாழ்ந்து வந்தார். கருத்து வேறுபாடுகளின் காரணமாக இவரையும் பிரிந்து விட்டார்.

தொடர்ந்து 2020 இல் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் ஒரு மாத காலத்துடன் நிறைவு பெற்று விட்டது. இவ்வாறாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்த வனிதா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இட்ட பதிவு ஒன்று அவரது ரசிகர்கள் பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

அதாவது அதில் அவர் வெள்ளை நிற உடையணிந்து மணப்பொண்ணு மாதிரியே காட்சி அளிக்கின்றார். எனினும் அவர் ஷூட்டிங் இற்காக எடுத்த போட்டோ ஒன்றே அது. இதனை அவதானிக்காத ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு அப்புகைப்படத்தை வைரலாக்கியும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement