நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் 'அநீதி' என்ற திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தமிழ் சினிமாவில் காவியத் தலைவன், ஜெயில், வெயில், அங்காடித் தெரு, போன்ற பல படங்களை இயக்கியவர்தான் வசந்த பாலன்.
இவர் தற்போது 'அநீதி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடிக்க, நாயகியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
அதேவேளை குறித்த படத்தில் முக்கிய பிரபலங்களான வனிதா விஜயகுமார், நாடோடிகள் பரணி, பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, அறந்தாங்கி நிஷா, காளி வெங்கட், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'அநீதி' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் நடிகை வனிதா விஜயகுமார் உரையாற்றும்போது,
இந்த திரைப்படத்தின் மூலம் ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் நான் மீண்டும் பிரவேசிக்கிறேன். இது ஒரு மிகவும் அருமையான திரைப்படம். இதில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் ஒன்றை எனக்கு அளித்த வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. திரைத்துறையின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தும் வசந்த பாலனிடம் துளி அளவு கர்வம் கூட இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
https://www.maalaimalar.com/cinema/cinemanews/tamil-cinema-vanitha-vijayakumar-speaks-about-arjun-das-633551
Listen News!