• Sep 20 2024

மஞ்சள் காமாலை வந்தும் குடியை விடல - தாய் மஞ்சுளா குறித்து உண்மைகளை போட்டுடைத்த வனிதா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சர்ச்சைக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருபவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளாவுக்கு மகளாக பிறந்த இவர், தன் தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குடும்பத்தைவிட்டு பிரிந்தார்.

இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு தாய் மஞ்சுளா காலமானார். அவரின் மறைவின் போது கூட வனிதாவை இறுதிச்சடங்கு செய்யவிடாமல் பிரச்சனை செய்தது சர்ச்சை ஆனது.


இந்த நிலையில், ஷகீலா உடனான பேட்டி ஒன்றில் தன் தாயின் கடைசி நிமிடங்கள் பற்றி யாருக்கும் தெரியாத ரகசியங்களை போட்டுடைத்துள்ளார் வனிதா. அதன்படி ஏர்போர்டில் விஜயகுமாருடன் நடந்த சண்டைக்கு பின்னர் ஒருநாள் மஞ்சுளா தன்னை வீட்டுக்கு அழைத்ததாகவும், அப்போது வீட்டுக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுததாகவும் வனிதா கூறினார். 

தனது தாயின் குடிப்பழக்கம் பற்றி பேசிய வனிதா, அவருக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்தும் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை என கூறினார்.


தனது தாய் மஞ்சுளா தன்னிடம் சில ரகசியங்களை சொன்னதாக கூறிய வனிதா, அவை என்ன என்பதையும் விவரித்தார்.

இந்தியாவின் தலைசிறந்த வக்கீலான ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என கூறினார். அதோடு தான் பல உண்மைகளை சொல்ல வேண்டும் அதனை வீடியோவாக எடு எனவும் கூறினார். ஆனால் நான் அதை செய்யவில்லை. அதேபோல் என்னுடையை தந்தையிடமும் வனிதாவை விட்றாதீங்க என சொன்னார்.


என் அம்மா மஞ்சுளா இறந்தபோது என்னை இறுதிச்சடங்கை செய்ய விடாமல் தடுத்தனர். பின்னர் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை அழைத்து இறுதிச்சடங்கை செய்ய வைத்தனர். அன்னைக்கு அவங்க மட்டும் இல்லேனா என் தாய்க்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாம போயிருக்கும். எனக்கு சொத்தில் உரிமையில்லைனு சொல்றாங்க, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சொத்து பிரிக்கப்பட்டால் என்னுடைய மகள்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் அதுவே எனது விருப்பம் என வனிதா கூறினார். 

Advertisement

Advertisement