பழம்பெரும் நடிகர் விஜயகுமாருக்கும் நடிகை மஞ்சுளாவுக்கும் மகளாக பிறந்தவர் தான் வனிதா விஜயகுமார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். நடிகர் ஆகாஷை 2000ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட வனிதா விஜயகுமார் 2007ம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்தார். நடிகர் ஆகாஷ் உடன் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றுக் கொண்டார் வனிதா .
அதன் பின்னர் 2007ம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் வனிதா விஜயகுமார். ஆனந்த் ஜெய் ராஜனுக்கும் வனிதா விஜயகுமாருக்கு பிறந்த மகள் தான் ஜெனிதா ராஜன். ஆனந்த் ஜெய் ராஜனையும் 2012ம் ஆண்டு விவகாரத்து செய்து பிரிந்த வனிதா விஜயகுமார் தனது இரு மகள்களையும் தன்னுடன் வைத்திருக்க விரும்பினார்.
ஆனால், தனது மகளை ஆனந்த் ஜெய் ராஜன் கோர்டில் வழக்கு தொடர்ந்து தன்னிடமே வைத்திருக்கும் வகையில் செய்து விட்டார். அந்தவகையில் வனிதாவின் மூத்த மகள் பெரிய பொண்ணாக மாறி வனிதாவின் யூடியூப் சேனலுக்கு உதவி செய்து வருகிறார்.
அதேபோன்று வனிதாவின் இளைய மகள் ஜெயனிதா ராஜன் புத்தகங்களை எழுதி வெளியிடுகின்றாராம். அந்தவகையில் சமீபத்தில் ஜெனிதா புத்தகமொன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை வனிதா விஜயகுமார் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் "14 வயசிலும் உங்க மகளுக்கு இப்படி ஒரு திறமையா" எனக் கூறி ஆச்சர்யத்துடன் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!