• Sep 20 2024

படப்பிடிப்பு முடியும் முன்னரே வியாபாரத்தில் எகிறும் வாரிசு திரைப்படம்- இத்தனை கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் 'வாரிசு'. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா.சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.ஏற்கனவே பலர் நடித்து வரும் இந்த படத்தில் லேட்டஸ்டாக எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க விஜய் தான் டைரக்டர் வம்சியிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஓடிடி ரிலீஸ் உரிமை 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என்றும், அதேபோன்று சாட்டிலைட் உரிமையை ரூ 65 கோடி வியாபாரம் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது தவிர இந்தி உரிமை தனி வியாபாரம் நடைபெற்று வருகிறதாம். விஜய்யின் சம்பளம் உள்பட 'வாரிசு' திரைப்படத்தின் பட்ஜெட் 200 கோடி என்று கூறப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டை ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையிலேயே தயாரிப்பாளர் எடுத்து விட்டதாகவும் தியேட்டர்களில் ரிலீஸாகும் அனைத்துமே அவருக்கு லாபம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே வியாபாரம் தொடங்கி விட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement