தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்துள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படம் போன்று இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தை தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று விஜய் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் நிறைவு செய்வதை கொண்டாடும் விதமாக வாரிசு புது அப்டேட் மாலை 6.30 மணிக்கு வெளியிடப்படுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
எதிர்பார்த்தது போலவே தற்போது வாரிசு படத்தின் இரண்டாம் சிங்கிள் அப்டேட் தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
"தீ தளபதி" என்ற இந்த பாடல் டிசம்பர் 4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்படுமென அறிவித்து இருக்கின்றனர்.
#VarisuSecondSingle - #TheeThalapathy 🔥
THE BOSS is all set to arrive on Dec 4th at 4PM 💥#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Lyricist_Vivek @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal#30YearsOfVijayism pic.twitter.com/bpZIjNRLq4
Listen News!