தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் பாலகிருஷ்ணா.இவர் தற்பொழுது தனது 107 வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.வீர சிம்ஹா ரெட்டி என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
மேலும் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் பாலையா, வீர சிம்ஹா ரெட்டி படத்திலும் மரண மாஸ் காட்டியுள்ளார். இந்நிலையில் இந்தப் படம் சங்கராந்தி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.
ஒரே அடியில் 50 பேரை பொளந்துகட்டும் மாஸ் ஹீரோ பாலையா, இந்தப் படத்திலும் தனது ஃபார்மேட்டை விடவில்லை என சொல்லப்படுகிறது. இப்போது படமும் வெளியாகி தரமான அன்லிமிடெட் ஆக்ஷன் ட்ரீட் கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடைசியாக பாலையா நடிப்பில் வெளியான அகண்டா படத்தை போலவே இதிலும் வெறித்தனமாக ஃபெர்பாமன்ஸ் செய்துள்ளார்.
பாலையாவின் ஆக்ஷனும் தமனின் பின்னணி இசையும் ரசிகர்களை உசுப்பேத்திவிட்டதாக தெரிகிறது. அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பாலையாவின் வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு குவிந்த பாலையா ரசிகர்கள், வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை உற்சாகமாக பார்த்துள்ளனர். ஆனால், அதுவே கொஞ்சம் ஓவர் டோஸாக போக நிலைமை விபரீதமாகிவிட்டதாம்.
ஏற்கனவே படம் முழுக்க பாலையாவின் சீற்றம் தியேட்டரில் இருந்து ஸ்பீக்கர்களை அதிர வைக்க, ரசிகர்கள் அவருக்கே டஃப் கொடுத்துள்ளனர். ரசிகர்களின் வெறித்தனமான கூச்சல் பக்கத்து ஸ்க்ரினில் படம் பார்த்து இருந்தவர்களையே மிரள வைத்துள்ளதாம். இதனால் கடுப்பான தியேட்டர் ஆப்ரேட்டர், போலீஸ் ஆபிஸருடன் உள்ளே சென்று ரசிகர்களை வறுத்தெடுத்துவிட்டார். இப்படி கூச்சல் போட்டால் பக்கத்து ஸ்க்ரீனில் படம் பார்ப்பவர்கள் எப்படி நிம்மதியாக பார்க்க முடியும்.
இதற்கு முன் தெலுங்கு ரசிகர்கள் இப்படி அட்ராசிட்டி செய்ததில்லை. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் நடந்ததால் காட்சி ரத்து செய்யப்படுகிறது. தயவுசெய்து வெளியே போகவும் என எச்சரிக்கை செய்துவிட்டு செல்கிறார். அவருடன் வந்த போலீஸாரும் ரசிகர்களை வெளியேற சொல்ல, ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!