விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. இந்த சீரியலும் கிட்டத்தட்ட முதல் பாகத்தின் சாயலில் ஓடிக் கொண்டிருக்கின்றது. அத்தோடு அண்மையில் வெண்பா என்னும் கதாப்பாத்திரத்தில் பஃரீனா தான் என்ட்ரி கொடுத்திருந்தார்.
இதனை அடுத்து சீரியலில் பழைய மாதிரி வெண்பாவுக்கும் கண்ணம்மாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகின்றது.அதன்படி கண்ணம்மா வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போது அவருடைய தண்ணீர் போத்தலுக்குள் வெண்பா நித்திரைக் குளிசையை போட்டு விடுகின்றார். இது தெரியாத கண்ணம்மா அந்த தண்ணீரை எடுத்து குடித்து விடுகின்றார்.
பின்னர் கண்ணம்மா வகுப்பில் நித்திரையில் இருக்க வகுப்பில் இருக்கும் பிள்ளைகள் சண்டையில் ஈடுபட்டதால் கண்ணம்மாவை சௌந்தர்யா நீ இனிமேல் படிப்பிக்க வரக் கூடாது என எச்சரிக்கின்றார். இருப்பினும் கண்ணம்மாவுக்காக பாரதி சென்று சௌந்தர்யாவிடம் பேசுகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!