இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 15ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.இப்படத்தில் சிம்பு முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
தென் மாவட்டத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியாக மும்பைக்கு செல்லும் முத்து வீரனின் வாழ்க்கை சம்பவங்களே இப்படம் எடுத்துக் கூறுகின்றது.இந்த படத்தில் பாவை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை சித்தி இத்னானி,
இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளதோடு தன்னுடைய முதல் படத்தின் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.இவருடைய அழகான சிரிப்புக்கும் நடிப்புக்கும் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக புதிய படத்திலும், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 100 கோடி வானவில் படத்திலும் நடித்துள்ளார்.அனைவரிடமும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட நடிகை சித்தி இத்னானி, சமீபத்தில் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கு இருப்பவர்களிடம் அன்பாக பேசி மகிழ்ந்து இருக்கிறார்.
மேலும் அவர்களுக்கு தேவையான உணவு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.சித்தி இத்னானி இந்த செயலை பாராட்டிய முதியோர்கள், அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!