• Sep 20 2024

குக் வித் கோமாளி போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த வெங்கடேஷ் பட் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் அம்மு அபிராமி, வித்யூலேகா, ரோஷ்ணி, ஸ்ருத்திகா, கிரேஸ் ஆகியோருடன் சமீபத்தில் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த சுட்டி அரவிந்த் மற்றும் வேட்டை முத்துக்குமார் அகியோர் நிகழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் யாரும் சரியாக செய்யவில்லை என நடுவர்கள் போட்டியாளர்களை எச்சரித்தனர். அத்தோடு யாருக்குமே band தரப்படவில்லை. இந்த வாரமும் மீண்டும் அதே bandக்கான டாஸ்குகள் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இன்றைய எபிசோடு தொடங்கிய உடனேயே போட்டியாளர்களுக்கு நடுவர்கள் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த முறை டபுள் எலிமினேஷன் இருக்குமென செப் வெங்கடேஷ் பட் அறிவித்ததும் போட்டியாளர்கள் ஷாக் ஆனார்கள்.

Advertisement

Advertisement