• Sep 20 2024

வேறொருவருடன் வெண்ணிலாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்... இனி சூர்யாவின் நிலை என்ன..? அதிரடித் திருப்பத்துடன் 'காற்றுக்கென்ன வேலி' ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'காற்றுக்கென்ன வேலி'. இந்த சீரியலானது கல்லூரிக் கதைக்களத்தை மையமாக கொண்டிருந்தாலும் காதல், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் வெண்ணிலாவின் தந்தை தனது தங்கையின் மகனுக்கு வெண்ணிலாவைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதற்கு சம்மதம் என அவர்களிடம் கூறுகின்றார்.


அதுமட்டுமல்லாது "வருகிற 10-ஆம் தேதியே கல்யாணத்தை வச்சுக்கணும் " எனவும் கூறுகின்றார். அதற்கு அவர்கள் வெண்ணிலாவிடம் உனக்கு இந்தக் கல்யாணத்திற்கு சம்மதமா எனக் கேட்கின்றனர். பதிலுக்கு வெண்ணிலாவின் தந்தை "அதெல்லாம் என் பொண்ணு நான் சொல்லுற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுவா" எனக் கூறுகின்றார்.


இதனையடுத்து இரு வீட்டாரும் நிச்சயதார்த்த தட்டை மாற்றிக் கொள்கின்றனர். இதனைப் பார்த்து வெண்ணிலா அதிர்ச்சி அடைகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.    


Advertisement

Advertisement