திரையுலகைப் பொறுத்தவரையில் சமீபகாலமாக அடுத்தடுத்து பல உயிரிழப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் தான் உள்ளன. அந்தவகையில் தற்போது மற்றுமோர் நடிகரும் உயிரிழந்துள்ளார்.
அதாவது மலையாள திரையுலகின் மூத்த நடிகரான சி.வி.தேவ் உடல்நலக்குறைவால் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி சி.வி.தேவ் 83வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 'யாரோ ஓரல்' என்ற மலையாள படத்தை டைரக்டும் செய்து இருந்தார். அத்தோடு பொந்தன் மட என்ற படத்தில் மம்முட்டி மற்றும் நசுருதின் ஷாவுடன் இணைந்து நடித்து இருந்தார்
இந்நிலையில் இவர் காலமான செய்தி அவரின் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றது. இவரின் இறப்பிற்கு ரசிகர்கள், பிரபலங்கள் உட்படப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!