வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘விடுதலை 1 பாகம் ‘ மார்ச் 31 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படம் பாசிடிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. இப்படம் ஒரு பாக்ஸ் ஆபிஸில் ரூ.28 கோடி தாண்டியுள்ளதாம்.
இந்த நிலையில், ‘வாடிவாசல்’ படத்திற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகளை தொடர இயக்குநர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வெற்றிமாறன் ‘விடுதலை பகுதி 2’ படத்திற்கான மீதமுள்ள காட்சிகளை படமாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்திற்காக பார்வையாளர்களிடமிருந்து வரும் வரவேற்பைக் கண்டு இயக்குநர் மற்றும் நடிகர் சூரி மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இதற்கிடையில், இயக்குநர் வெற்றிமாறன் கடந்த வாரம் ‘விடுதலை’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து படக்குழுவினருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். முன்னதாக, வாடிவாசல் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை முடிக்க வெற்றிமாறன் முடிவு செய்திருந்தார். ஆனால்ம், இப்போது நடிகர் சூர்யா ‘சூர்யா 42’ படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால், வெற்றிமாறன் ‘விடுதலை பாகம் 2’ ஐ முடிக்க முடிவு செய்துள்ளார்.
Listen News!