விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும் . அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.
அபி சுடரை காரில் ஏற்றிக் கொண்ட பிரியாணி சாப்பிட சென்ற போது கார் விபத்தில் சிக்கியது. இதில் சுடர் முன்னுக்கு இருந்த காரணத்தினால் சுடருக்கு அதிக காயங்கள் ஏற்பட்டு சுடர் மயக்கத்தில் இருக்கிறார். உடனடியாக அப் அவரை ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து அனுமதிக்கிறார்.
தொடர்ந்து வெற்றி மனசுக்கு ஏதோ மாதிரி இருக்கு யாருக்கும் ஏதாவது நடந்திருக்குமோ தெரியல என்று எல்லோருக்கும் போன் பண்ணி நலம் விசாரிக்கின்றார்.கண்மனி மற்றும் அவரது அண்ணா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை நல்லாத் தான் இருக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர்.
அதனை அடுத்து விஜி அபியின் அப்பாவுக்கு போன் பண்ணி சுடர் விபத்துக்குள்ளான விடயத்தையும் சொல்கின்றார். பின்னர் வெற்றிக்கு சொல்லலாமா வேண்டாமா என யோசிக்கின்றார். பின்னர் கண்மனியைப் பார்த்த வெற்றியின் மச்சாள் வெற்றியை நம்பாத அவனைக் காதலிக்காத அவன் உன்னை ஏமாற்றி விட்டு போய்டுவான் என்று அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.
தொடர்ந்து ஹாஸ்பிட்டலில் கபிலன் அபியை பேசுகின்றார். உனக்கு ஆபத்து என்று சொல்லியும் தனியா போய் இப்போ என்ன நடந்திருக்க பார்த்தியா எனக் கேட்பதோடு ஆக்ஸ்சிடன்ட் பண்ணின லாறி பற்றியும் சொல்கின்றார்.இதைக் கேட்டு அபி அதிர்ச்சியடைகின்றார்.இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது. மேலும் வெற்றிக்கு இந்த விடயம் தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!