• Sep 20 2024

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை திடீரென நிறுத்த சொன்ன லைகா.. மார்ச் 15ல் படப்பிடிப்பு இல்லை..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பை ஒத்தி வைக்க லைகா நிறுவனம் கூறியிருப்பதாகவும் இதனால் மார்ச் 15ல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெறாது என்றும் கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ,அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம்விடாமுயற்சி’. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது தான் 80 சதவீதம் என்ற படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி அஜர்பைஜான் நாட்டில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

அஜித்துக்கு சமீபத்தில் சிறிய அறுவை சிகிச்சை நடந்த போதிலும் அவர் படப்பிடிப்புக்கு வருவதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென லைகா நிறுவனம் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்த கூறி இருப்பதாகவும் அதனால் படப்பிடிப்பு ஏப்ரல் அல்லது மே மாதம் தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

விடாமுயற்சிபடப்பிடிப்பை நிறுத்த சொன்னதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றாலும் கண்டிப்பாக பொருளாதார சிக்கல் இல்லை என்று மட்டும் தெரிய வருகிறது. அதேபோல் அஜித்தின் உடல்நல பாதிப்பு காரணமாகவும் படப்பிடிப்பில் பாதிப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் உண்மையில் என்னதான் நடக்கிறது என்று இயக்குனர் மகிழ் திருமேனி உள்பட படக்குழுவினர்களுக்கே தெரியாத மர்மமாக உள்ளது.

விடாமுயற்சிபடத்திற்கு பின்னர் தொடங்கப்பட்ட விஜய்யின்லியோமுடிந்து தற்போதுகோட்படமும் நிறைவடையவுள்ள நிலையில் அஜித்தின் படம் ஆமை வேகத்தில் நகர்ந்து வருவது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement