விஜயகாந்த் நடித்த 'கள்ளழகர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சோனுசூட். இதனைத் தொடர்ந்து பல படங்களிலும் இவர் வில்லனாக நடித்துள்ளார். அத்தோடு இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் சுமார் 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது சோனு சூட் தற்போது ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் இணைந்து ஃபதே படத்தில் நடித்து வருகிறார். மேலும் கொரோனா காலத்தில் வெளிமாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்புவதில் சோனுசூட் எடுத்த முயற்சி அவரை மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக மாற்றி இருக்கின்றது.
அந்த சம்பவத்திற்கு பிறகு நடிகர் சோனு சூட் எதை செய்தாலும் அது மக்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது. இந்நிலையில் இவர் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் உள்ள துகோஜி ராவ் பவார் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.
அதாவது கிட்டதட்ட 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 2500 கிலோ அரிசியைப் பயன்படுத்தி ரசிகர்களும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து சோனு சூட்டின் பிரமாண்டமான உருவப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!