• Sep 20 2024

ஜெனியின் போனுக்கு வீடியோ அனுப்பி மிரட்டும் மாலினி! பேரதிர்ச்சியில் செழியன்! விறுவிறுப்பான கட்டங்களுடன் பாக்கியலட்சுமி எபிசோட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் குறித்த சீரியலின் இன்றைய எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில்  என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம். 

அதன்படி இன்றைய எபிசோட்டில், அங்காளம்மன் கோவில் தர்மகத்தா பாக்கியாவுக்கு போன் செய்து, 'கோவில்ல அன்னதானம் ஏற்பாடு செய்து இருக்கம், 500 பேருக்கு சமைக்கனும், நீங்க நல்லா சமைப்பீங்க என்டு எங்களுக்கு ஒருத்தர் ரெக்கமன்ட் பண்ணி இருக்காரு, அதால ஆர்டர உங்களுக்கே கொடுக்கலாம் என்டு தான் கால் பண்ணினான்' என்டு சொல்ல, இத கேட்ட பாக்கியா சந்தோஷத்துல 'யார் உங்களுக்கு ரெக்கமன்ட் பண்ணினா, நான் நேர்ல வந்து கதைக்கலாமா? நிச்சயமாக இந்த ஆர்டரை எடுத்துக் கொள்கிறேன்' என கூறுகிறார்.


அடுத்தப்பக்கம், செழியன் குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க ஜெனி, 'என்னலாம் இப்படி கொஞ்ச மாட்டுற' என கேட்க, 'கொஞ்சிட்டா போச்சு' என செழியன் ஜெனியை கொஞ்சி கதைக்கும் போது இடையில் மாலினி போன் எடுக்கவும் போனை எடுக்காமல் இருக்கிறார்.

பிறகு மாலினி ஆடியோ மெசேஜ் போட செழியன் அதை பார்த்து ஜெனியையும் குழந்தையையும் தூங்க வைத்துவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல முயல்கிறார். இந்த நிலையில் பாக்யாவிடம் சிக்கிக் கொள்ள ஏதோ சமாளித்து விடுகிறார். ஆனாலும் பாக்கியா அந்த மாலினி எக்காரணத்தைக் கொண்டும் உன் வாழ்க்கையில் வரக்கூடாது என எச்சரிக்கிறார்.

மறுநாள் காலையில் செழியனுக்கு போன் போடும் மாலினி, 'குட் மோர்னிங் சொல்லி நான் தவறுதலா ஒரு வீடியோவ ஜெனிக்கு அனுப்பிட்டன்' என்று  செழியனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். பதறியடித்து செழியனும் ரூமுக்கு செல்ல போன பார்த்து கோவமா இருந்த ஜெனி, 'ஏன் குழந்தைட போட்டவ சோசியல் மீடியால போட்ட' என்று கேக்க கொஞ்சம் நிம்மதியா சிரிச்ச செழியன் 'அது கை தானே போட்டன் இப்ப டெலீட் பண்றன்' என்று சொல்ல, மாலினியும் ஏதோ ஒரு வீடியோ அனுப்பி இருக்காங்க என்ன என்று ஓபன் செய்து பார்க்க செழியன் உச்சகட்ட டென்ஷன் அடைகிறார். பிறகு வெறும் ரைமிங்ஸ் வீடியோ என்பது தெரிய வருகிறது. ‌


அதைத்தொடர்ந்து ராதிகா கோபிக்கு போன் போட்டு 'எங்கள பத்தி உங்களுக்கு அக்கறையே இல்லை, அம்மா கூப்பிட்டதும் பின்னாலையே போய்ட்டீங்க என ' என்று கோபப்பட, போனை பிடுங்கி 'அவன நீ சந்தோஷமாக இருக்க விட மாட்டியா' என திட்டி போனை வைக்கிறார் ஈஸ்வரி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement