ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் வித்யா நம்பர் 1.
மேலும் இந்த சீரியலில் வித்யாவை ஏற்றுக் கொள்ளாமல் இருந்த சஞ்சய் காதலை புரிந்து கொண்டு வித்யாவை ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது அடுத்தடுத்து பிரச்சனைகளை சிக்கி வருகிறாள் வித்யா.
வேதவல்லி ஊரில் இல்லாத போது income tax ரைடு வர சஞ்சய், வித்யா என இருவரும் ஒருவழியாக இந்த பிரச்சனையை சமாளித்த நிலையில் ஆரம்பத்தில் வித்யாவுக்கு ஒருவருடன் திருமணம் வரை சென்று அந்த கல்யாணம் நின்று போனது.
மேலும் இப்படியான நிலையில் அந்த நபர் ரஞ்சித் எனக்கும் வித்யாவுக்கும் ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது, என்னை ஏமாற்றி விட்டு இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என போலி சான்றிதழ்களுடன் கோர்ட்டில் வழக்கு தொடர வித்யாவுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வேதவல்லி இந்த பிரச்சனைக்கு நீயே தான் தீர்வு காண வேண்டுமென கை விரித்து விட வித்யா தனக்காக தானே வாதாட முடிவெடுக்கிறாள். இந்த வழக்கில் தனக்குத் தானே வாதாடி வித்யா எப்படி ஜெயிக்க போகிறாள் என்பது குறித்த காட்சிகள் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளன.
இந்த காட்சிகளில் நீதிபதியாக பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜ் அவர்கள் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. அத்தோடு திரைக்கதை நாயகனான இவர் வித்யா நம்பர் 1 சீரியல் கதை பிடித்துப்போன காரணத்தினால் இந்த சீரியலில் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளன.
பிற செய்திகள்
- சரவணன் அருள் நடித்த தி லெஜெண்ட் படத்தின் திரைவிமர்சனம்
- அந்த கேள்வி கேட்ட நபர்- நச் என பதிலளித்த சீரியல் நடிகை நந்தினி..!
- தனுஷை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட அறந்தாங்கி நிஷா…!
- விக்கியின் அம்மா மற்றும் தங்கையை பார்த்துள்ளீர்களா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!
- இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!