• Sep 20 2024

ஃபர்ஸ்ட் இயர் மேரேஜ் ஆனிவர்சரியைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்தாண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

 திருமணமான நான்கே மாதத்தில் இந்த ஜோடிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வாடகைத்தாய் முறையில் அவர்கள் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் மற்றும் உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டுள்ளனர்.


குழந்தை பிறந்த பின்னரும்  நயன்தாரா சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் கதை பிடிக்காத காரணத்தால் அஜித் அந்தப் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் அந்த கதையில் யார் நடிக்கப் போகின்றார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவொன்றினைப் போட்டுள்ளார். அதில் உனக்கு நேற்று திருமணம் நடந்தது! என்று திடீரென்று எனது நண்பர்கள் “ஹேப்பி ஃபர்ஸ்ட் இயர் மேரேஜ் ஆனிவர்சரி” என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். லவ் யூ #தங்கமே! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்!


இன்னும் வெகுதூரம் போகவேண்டும் !ஒன்றாகச் சாதிக்க நிறைய!நம் வாழ்வில் உள்ள அனைத்து நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும் எங்கள் திருமணத்தின் இரண்டாவது ஆண்டை எங்கள் வாழ்வின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுடன் கொண்டு வருவோம் என்று பதிவிட்டுள்ளார்.இதனால் ரிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement