நீயா நானாவின் லேட்டஸ்ட் எபிசோடை பார்த்து நெகிழ்ந்து போன இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.
விஜய் டிவியில் 15 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்ரி ஷோ தான் நீயா நானா. இரு தரப்பு வாதமாக முன்னெடுத்துச் செல்லப்படும் இந்த நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் எபிசோடு அனைவரையுமே நெகழ வைத்து விட்டது.அதாவது கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மெனைவிமார்கள் என்ற தலைப்பிலேயே விவாதிக்கப்பட்டது.
அதாவது சீனிராஜா என்பவர் வியாபாரத்தில் நஷ்டமடைந்த நிலையில், மனைவி உள்பட அவரது வீட்டார் யாருமே மதிக்காத நிலையில், வாழ்ந்து வருகின்றார்.அவரைப் பற்றி அவருடைய மனைவியே ஏளனமாகப் பேசியது தொகுப்பாளர் கோபிநாத்தை ரொம்பவே ஆத்திரம் அடையச் செய்தது.
படிப்பறிவு இல்லாத கணவர் என மனைவி கிண்டல் அடிக்க, எங்க அப்பா தோற்கலன்னு சொல்லி மகள் அப்பாவை ஜெயிக்க வைத்த தருணம் பலராலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் விஜய் டிவி நீயா நானாவின் புரமோவை ஷேர் செய்து போட்டுள்ள டுவீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
அந்த வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில், "மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என தங்கமீன்கள் படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய வைர வரிகளை பதிவிட்டு தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரைத் தவிர நேற்றைய தினம் நடிகை ப்ரியா பவானி சங்கரும் இந்த தந்தைக்கு ஆதரவாக தனது கருத்தினைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!