தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக விளங்குபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் நானும் ரௌடி தான் திரைப்படத்தின் மூலம் காதலர்களாகி கடந்த மாதம் 9ம் திதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் வெகு விமர்சையாக நடந்தது.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய்,அஜித், சூர்யா, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து விட்ட நயன்தாரா திருமணத்திற்குப் பிறகும் படங்களில் பிஸியயாக நடித்து வருகின்றார்.
திருமணம் முடிந்த மறுநாளே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கணவர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, தாய்லாந்தில் ஹனிமூனைக் கொண்டாடி இந்த ஜோடி அங்கிருந்து ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர்.
விக்னேஷ் சிவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவை கட்டி அணைத்துக்கொண்டு மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் என்ன வீக் எண்ட் கொண்டாட்டமா என்றும்… நடத்துங்க பாஸ்… நடத்துங்க என்றும் அந்த புகைப்படத்தை பார்த்து ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தந்தையின் பிறந்தநாளுக்கு போகாத விஜய்- கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட அவரது அம்மா ஷோபன
- கோபி, ராதிகா உறவு பற்றி தெரிய வந்த உண்மை… அடுத்து நடக்கப் போவது இது தான்..!
- தலையில் முடி இல்லாததற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினி
- விஜய் பட ஹீரோயினுடன் இணையும் நடிகர் சூர்யா..வெளியானது சூப்பர் தகவல்..!
- “என்னை சிறையில் வைத்த அடித்து உதைத்தனர்”- பிரபல நடிகை
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!