• Sep 21 2024

ஜெயிலர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பீஸ்ட் படத்தின் விமர்சனங்களுக்குப் பிறகு இயக்குநர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார்.தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சன்பிக்சர்ஸ் தயாரித்து வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும், அதன் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகததால் பெரும் சோகத்தில் இருந்தார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் தற்போது ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் படி ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது நெல்சனின் நெருங்கிய நண்பரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஜெயிலர் படத்தைப்பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.

அப்போது அவர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

எனினும் இதனையடுத்து ரஜினி ரசிகர்கள் சற்று மகிழ்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement